Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநீறு அணிவதன் மகத்துவம்!

டிசம்பர் 11, 2020 08:31

நமது முன்னோர் வகுத்த வழிமுறைகள் மனித வாழ்விற்கு இயற்கையாகவும், செயற்கையாகவும் பல்வேறு நன்மைகள் தரக்கூடியதாக அமைந்துள்ளது என்பதை மறுக்கவும், மறைக்கவும் முடியாது. 

அந்த வகையில் நமது கலாச்சாரத்தின் படி நெற்றியில் அணியப்படும் திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றால் உடலுக்கும் மனதிற் கும் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அவற்றை அணிய நம் மக்கள் விருப்பம் கொள்ளாமல் இருப்பது வருத்தப்படவேண்டிய ஒன்றுதான். மாற்று மதத்தினர் எந்த காரணமுமின்றி அவரவர் மதச் சின்னங்களை அணியும்போது, காரண காரியங்கள் மிகுந்த நமது மதச் சின்னங்களை நாம் அணியாமல் இருப்பது நமக்கும் நமது உடலுக்கும் நாமே தீமைகளை செய்துகொள்கிறோம் என்பதுதான் உண்மை. 

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசு மாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம்போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண் டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். 

இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள் வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வு களை ஏற்றுக் கொள்ளுகின்றது.  திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது. 

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப் படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள். 

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்து விட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப் பதைக் கண்டிருப்போம், புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடும், அதே போலத்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். 

பசுமாட்டுச் சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும்போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத் தன்மையைக் கொடுக் கின்றது. 

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகு வாகச் செய்யமுடியும். அதனாலேயே மன வசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. 

சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதாவது நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. உடலின் பெரும்பாலான நரம்புகள் நெற்றிப்பொட்டின் வழியாகவே செல்கின்றன. ஆகவே நெற்றிப்பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தி இருக்கிறது. ஆனால் அந்தச்சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான். அங்கு பூசப்படும் சந்தனம் நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்கிறது. 
 சந்தனத்தை இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, மூளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் பிவீஜீஜீஷீநீணீனீஜீus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு உதவுகிறது.

உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச் சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா! 
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடை யிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும் படாம லும்சுண்டு விரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒரு வகை உணர்வு தோன்றும். 

அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதை யும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சி யுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. 

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். 
மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.

தலைப்புச்செய்திகள்